Tuesday, 28 February 2017
கல்லிடைக்குறிச்சி அப்பா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்
கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா
வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா!
கல்லிடைக்குறிச்சி-ஸ்ரீவராகபுரம் கிராமத்தின் வடக்கு மூலையில் அமைந்து உள்ளது ஸ்ரீகுளத்தூரிலய்யன் தர்மசாஸ்தா கோயில். சுமார் 700 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஸ்ரீமகா கணபதி, விசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சந்நிதிகளும் அமைந்து உள்ளன.
நெல்லைச் சீமையில், கரந்தையம்பதி எனப் போற்றப்படும் கல்லிடைக் குறிச்சி பகுதியில், தாமிரபரணி பாய்ந்தோடும் நதிக்கு அருகில், விஜயன் எனும் அந்தணர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அறத்திலும் வேதத்திலும் குறையின்றி இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லை என்பது மட்டுமே குறையாக இருந்தது.
ஒருநாள், அவரின் இல்லத்துக்கு மகான் ஒருவர் விஜயம் செய்தார். 'தட்சிண கேரளத்தில் பம்பா எனும் நதி ஓடுகிறது. அதில் நீராடிவிட்டு, மலையில் ஏறி, ஸ்ரீசபரி அன்னையைத் தரிசித்து, அவளின் அருளைப் பெறுங்கள். உங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்’ என அருளிச் சென்றார்.
அதன்படி, பம்பையில் நீராடி, அங்கிருந்து மலைக்குச் சென்று ஸ்ரீசபரி ஆஸ்ரமம் அடைந்தார். அப்போது, 'உன் விருப்பம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. உன் இல்லத்தில் குழந்தைச் செல்வம் பிறக்கப் போகிறது. உன் ஊருக்கு நான் விஜயம் செய்யும் தருணம் நெருங்கிவிட்டது’ என அசரீரி கேட்டது. சந்தோஷமும் நிறைவும் பொங்க ஊருக்குச் சென்றார் விஜயன்.

இதையடுத்து ஒருநாள், பந்தள தேசத்து ராஜாவான ராஜசேகர மன்னனின் மனைவிக்கு நேர்ந்த தீராத தலைவலியைத் தீர்ப்பதற்காக, ஸ்ரீமணிகண்ட ஸ்வாமி புலிப்பால் கொண்டு வந்தார். அதேநாளில், கல்யாணபுரி என்றும் கல்லிடைக்குறிச்சி என்றும் சொல்லபடுகிற கிராமத்தில் உள்ள விஜயனின் இல்லத்துக்கு பாலகனாக வந்து எழுந்தருளினார் (தர்மசாஸ்தா தண்டகம் எனும் வடமொழி ஸ்லோகத்தில் இதுகுறித்து விவரிக்கப்பட்டு உள்ளது).
அந்த பாலகனுக்கு கம்பங்கூழை ஊட்டி மகிழ்ந்தனர் அந்தத் தம்பதி. அப்படியே உறங்கச் செய்தார்கள். சிறிதுநேரத்தில் பாலகனைக் காணோம். ஆனால் அந்த வீடு முழுவதும் ஒளி பரவியிருந்தது. அப்போது தர்மசாஸ்தாவான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி திருக்காட்சி தந்து, 'உன் வம்சத்துக்கு எப்போதும் துணை நிற்பேன்’ என அருளினார். அன்று முதல் விஜயனின் பரம்பரைக்கு கம்பங்குடி (கம்பங்கூழ் குடிக்க வழங்கியதால் இந்தப் பெயர்) எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர். இன்றைக்கும் கம்பங்குடி வம்சத்தார் உலகெங்கிலும் வாழ்ந்து வருகின்றனர்.

சபரிகிரி வாசன் கோலோச்சும் கேரளத்தின் பல இடங்களிலும் கரந்தையார்பாளையம் எனப்படும் கம்பங்குடி சமூகத்துக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன.
கல்லிடைக்குறிச்சியில் இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதர்மசாஸ்தா! காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கார்த்திகை மாதம் துவங்கியதும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள், இங்கு வந்து தர்மசாஸ்தாவை வணங்கிச் செல்கின்றனர். வாழையடி வாழையென வம்சம் தழைக்கச் செய்கிறார் தர்மசாஸ்தா எனப் போற்றுகின்றனர்
சென்னை சூப்பர் கிங்சை வாங்கியது கல்லிடைக்குறிச்சி காசிவிஸ்வநாதன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த காசி விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேர் இணைந்து உருவாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம், வாங்கியுள்ளதாக கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் பி.சி.சி.ஐ அமைப்பிலும் பதவியில் இருந்தால், ஆர்வம் பிளவுபடும் என்பதால், இரு பதவிகளை தவிர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பி.சி.சி.ஐ தலைவராக இருந்த ஸ்ரீநிவாசன் தனக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்றார். Popular Videos 01:35 பூங்காவனத்தம்மன் கோவில் மயான சூறை திருவிழா-வீடியோ 10:06 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் பெண் பேச்சு-வீடியோ 02:19 இளைஞர்களை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்-வைகோ - வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கை மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, தற்போது நிர்வகித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் பட்டியல் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த காசி விஸ்வநாதன் சுப்பிரமணியன் இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த காசி விஸ்வநான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஆவார். தமிழ்நாடு கிரிக்கெட் சஙகத்தின் தலைவராக இருப்பவர் ஸ்ரீனிவாசன். தற்போதையை பி.சி.சி.ஐ தலைவரான ஸ்ரீனிவாசனும், காசி விஸ்வநாதனும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். எனவே நண்பரிடமே அணியை கைமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சபரீசன் லட்சுமணன், டி. நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் பாலசுப்ரமணியம் ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிற இயக்குநர்கள் என அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு...?! - கலகல.... கல்லிடைக்குறிச்சி
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?’ என்கிற தலைப்பில் சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
வடிவேலு பாணியில் சொல்வதானால், ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?‘ என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசமானதொரு போட்டியை, கல்லிடைக்குறிச்சியில் உள்ள நாச்சியார் அசைவ தர்பார் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
வடிவேலு பாணியில் சொல்வதானால், ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?‘ என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசமானதொரு போட்டியை, கல்லிடைக்குறிச்சியில் உள்ள நாச்சியார் அசைவ தர்பார் ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில், நடிகர் பரோட்டா சூரி ஒரு சாப்பாட்டுப் போட்டியில் பங்கேற்று, 50 பரோட்டாக்களை சாப்பிட்டு முடித்ததும், கடைக்காரர் அதனை ஒத்துக் கொள்ளாததால், ‘நீங்க கோட்டை எல்லாம் அழிங்க.. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்று சொல்லி கலங்கடிப்பார்.
அதே பாணியில் இந்த ஹோட்டலில், ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யார்?’ என்ற பெயரில் சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக சாப்பிட்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5001 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்கு முடிவடையும் என ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர். போட்டிக்காக ஹோட்டலில் மைக் செட் கட்டப்பட்டு, போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது.
இந்தப் போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன. அதன்படி, மது அருந்தியவர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் நேரத்தில் இடையூறு செய்வது போல நடந்து கொண்டால் காவல்துறையில் புகார் செய்யப்படும். காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை இப்போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும். ஆனால் சரியாக 9 மணிக்கு போட்டி முடிவடையும். அதன் பின்னர் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.
போட்டியில் பங்கேற்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால், அதாவது அதற்கு மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு அசாதாரண நிலை ஏற்பட்டால், அவரை உடனடியாகப் போட்டியில் இருந்து நீக்கி , உரிய மருத்துவம் செய்ய அழைத்து செல்லப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும். போட்டியின் முடிவில் அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டவருக்கு பரிசுத் தொகையாக 5001 வழங்கப்படும்’’ என விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.
அதே பாணியில் இந்த ஹோட்டலில், ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யார்?’ என்ற பெயரில் சாப்பிடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிகபட்சமாக சாப்பிட்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5001 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டி காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்கு முடிவடையும் என ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்து இருந்தனர். போட்டிக்காக ஹோட்டலில் மைக் செட் கட்டப்பட்டு, போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது.
இந்தப் போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன. அதன்படி, மது அருந்தியவர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் நேரத்தில் இடையூறு செய்வது போல நடந்து கொண்டால் காவல்துறையில் புகார் செய்யப்படும். காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை இப்போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்படும். ஆனால் சரியாக 9 மணிக்கு போட்டி முடிவடையும். அதன் பின்னர் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.
போட்டியில் பங்கேற்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால், அதாவது அதற்கு மேலும் சாப்பிட முடியாத அளவுக்கு அசாதாரண நிலை ஏற்பட்டால், அவரை உடனடியாகப் போட்டியில் இருந்து நீக்கி , உரிய மருத்துவம் செய்ய அழைத்து செல்லப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவரும் தாங்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும். போட்டியின் முடிவில் அதிக எண்ணிக்கையில் சாப்பிட்டவருக்கு பரிசுத் தொகையாக 5001 வழங்கப்படும்’’ என விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டி குறித்து அறிந்ததும் உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் பக்கத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து போட்டியில் பங்கேற்றனர். அதனால் பகலில் இருந்தே ஹோட்டலில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் சாப்பிட்ட பரோட்டாக்களின் எண்ணிக்கை குறித்துக் கொள்ளப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
இப்போட்டியில், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றார்.
இப்போட்டியில், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றார்.
அவரிடம் பேசியபோது, ‘நான் அத்லெடிக் பிளேயர். தினமும் ஓட்டப்பந்தயத்துக்காக பயிற்சி எடுத்துக் கொள்வேன். நானும் நண்பர்களும் சேர்ந்து பயிற்சி செய்து விட்டு, சில சமயம் நாங்களே, ‘யார் அதிகம் சாப்பிடுகிறார்கள்?’ என போட்டி வைத்துக் கொள்வோம். அதில் பெரும்பாலும் நானே ஜெயிப்பேன். அந்த பயிற்சியும் இன்று கைகொடுத்தது. அதனால்தான் என்னால் 42 பரோட்டாக்களை சாப்பிட முடிந்தது. எனக்கு அடுத்த இடத்தில் வந்தவர் 35 பரோட்டாக்களை மட்டுமே சாப்பிட்டு இருக்கிறார்’’ என்று சொன்னவர், இன்னும் நாலைஞ்சு பரோட்டாக்களை கூட என்னால் சாப்பிட முடியும்’’ என்று சொல்லி, அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை செய்திருந்த நாச்சியார் ஹோட்டல் நிர்வாகி மோசஸ் என்ற பாஸ்கரன் பேசும்போது, ‘‘நான் பொறியியல் பட்டதாரி. கம்ப்யூட்டர் படித்துவிட்டு சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செஞ்சேன். அந்த வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு வந்து கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். விக்கிரமசிங்கபுரத்தில் நான் கடை தொடங்கினேன்.
இந்தக் கடையை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். கடையை விளம்பரப்படுத்துவதற்காக ஆரம்பத்தில், 'ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொன்று இலவசம்'னு அறிவித்தேன். கூட்டம் அலைமோதியது. அதேபோல, 'பத்து பரோட்டா வாங்கினால் கூடுதலாக பத்து பரோட்டா இலவசம்'னு அறிவித்தேன். இந்த சமயத்தில், கூட்டம் அலைமோதியதால் காவல்துறையை வைத்துக் கூட்டத்தைச் சமாளிக்க வேண்டிய நிலைமை உருவானது.
அதன்பின்னர், சில தினங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வந்து, அவர்களுக்குள்ளாகவே அதிக பரோட்டா சாப்பிடுவது தொடர்பான போட்டியை நடத்தினாங்க. ரொம்ப ஜாலியா அவங்க இதில் பங்கேற்றதைப் பார்த்ததும், நாமே இப்படி ஒரு போட்டியை நடத்தலாமேன்னு தோணுச்சு. அதனால் இந்தப் போட்டியை நடத்தினேன். இதில் நிறைய பேர் ஆர்வத்தோட கலந்துக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் போட்டியில் கோதர் மைதீன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகை வழங்கினோம்’’ என்றார் உ ற்சாகமா
இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை செய்திருந்த நாச்சியார் ஹோட்டல் நிர்வாகி மோசஸ் என்ற பாஸ்கரன் பேசும்போது, ‘‘நான் பொறியியல் பட்டதாரி. கம்ப்யூட்டர் படித்துவிட்டு சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செஞ்சேன். அந்த வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு வந்து கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன். விக்கிரமசிங்கபுரத்தில் நான் கடை தொடங்கினேன்.
இந்தக் கடையை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். கடையை விளம்பரப்படுத்துவதற்காக ஆரம்பத்தில், 'ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொன்று இலவசம்'னு அறிவித்தேன். கூட்டம் அலைமோதியது. அதேபோல, 'பத்து பரோட்டா வாங்கினால் கூடுதலாக பத்து பரோட்டா இலவசம்'னு அறிவித்தேன். இந்த சமயத்தில், கூட்டம் அலைமோதியதால் காவல்துறையை வைத்துக் கூட்டத்தைச் சமாளிக்க வேண்டிய நிலைமை உருவானது.
அதன்பின்னர், சில தினங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வந்து, அவர்களுக்குள்ளாகவே அதிக பரோட்டா சாப்பிடுவது தொடர்பான போட்டியை நடத்தினாங்க. ரொம்ப ஜாலியா அவங்க இதில் பங்கேற்றதைப் பார்த்ததும், நாமே இப்படி ஒரு போட்டியை நடத்தலாமேன்னு தோணுச்சு. அதனால் இந்தப் போட்டியை நடத்தினேன். இதில் நிறைய பேர் ஆர்வத்தோட கலந்துக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் போட்டியில் கோதர் மைதீன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகை வழங்கினோம்’’ என்றார் உ ற்சாகமா
கமகமக்கும் கல்லிடைக்குறிச்சி அப்பளம்
ஓவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வித மதிப்பு இருக்கும். அது திண்பண்டமாக இருந்தாலும் சரி, நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருளாக இருந்தலும் சரி, நாம் அந்த பொருளுக்கு தரும் முக்கியத்துவத்தை வைத்து பொருளுக்கான முக்கியத்துவத்தை உணரலாம். நெல்லை என்ற உடன் நமக்கு தாமிரபரணியும், நெல்லையப்பர் கோவிலும் நினைவிற்கு வருகிறதோ இல்லையோ அல்வா நமக்கு நினைவிற்கு வரும் தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் நெல்லை அல்வாவிற்கு மயங்காதவர் எவரும் இல்லை எனலாம். அதே போல் பத்தமடை பாய் . வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு பத்தமடை பாய் உலக புகழ் பெற்று விளங்குகிறது. அதே போல் அப்பளம் என்ற உடன் நினைவிற்கு வருவது கல்லிடைக்குறிச்சியின் கமகமக்கும் அப்பளம் தான்.
இயக்குனர் சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் வரும் அப்பளம் தயாரிக்கும் காட்சிகள் பல கல்லிடைக்குறிச்சியில் எடுக்கப்பட்டவைதான். இன்றைக்கும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களின் கைவண்ணத்தில் கல்லிடை அப்பளத்தின் மவுசு வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விருந்து என்றால் எத்தனை வகை கறி வைத்திருந்தாலும் அப்பளம் இல்லையென்றால் அந்த விருந்தில் ஏதோ ஒன்று குறைகிறதே என வருத்தப்படுவார்களாம். அந்தளவிற்கு அப்பளம் அனைத்து மதத்தினரின் விருந்துகளிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது மிகையல்ல. ஏன் கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்க்கு மட்டும் இச்சிறப்பு என்றால் தமிழகத்தில் பல இடங்களிலும் தயாராகும் அப்பளங்கள் அனைத்தும் இயந்திரங்களின் உதவியுடன் தயாரிக்கப்படுபவை. ஆனால் கல்லிடைக்குறிச்சி அப்பளம் அவ்வாறு அல்ல . கையினால் பக்குவபடுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது மேலும் இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தாமிரபரணி தண்ணீரின் தனிச்சுவை என்கிறார் பல ஆண்டுகளாக அப்பளத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் கண்ணன். இவரின் அப்பளம் இன்றைக்கு மலேசியா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கண்ணன் நம்மிடம் கல்லிடைக்குறிச்சியில் 10க்கும் மேற்பட்ட அப்பள டிப்போ உள்ளது. பெரும்பாலும் உளுந்து அப்பளம் தயாரிக்கப்பட்டாலும், தற்சமயம் அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம், இரட்டை அப்பளம், பப்படம், ஆகியவை தயார் செய்யப்படுகிறது.
அப்பள தயாரிப்பை பொறுத்தவரை அப்பளம் தயாரிக்க சுத்தம் செய்யப்பட்ட உளுந்தம் பருப்பு, மற்றும் எண்ணெய் சீரகம் மற்றும் பெருங்காயம் இவை போதுமானது ஆகும். உளுந்தம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பின்பு கல்லுரலில் இட்டு நன்கு மாவாக அரைத்து கொள்ள வேண்டும் பின்பு அதை நன்றாக சலித்து கொள்ள வேண்டும் அரைத்த மாவை நன்கு சலித்து பின் அதனோடு சீரகம் மற்றும் அளவான உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அதையும் மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். நன்கு பிசைந்த மாவின் மீது எண்ணெய் தடவ வேண்டும். பிசைந்த மாவை உருட்டி கல்லுரலில் நன்கு இடிக்க வேண்டும். எவ்வளவிற்க்கு நன்றாக இடிக்கிறோமோ அந்தளவிற்கு அப்பளம் மிருதுவாக இருக்கும் என்பதால் பிசைந்த மாவை நன்கு கவனத்துடன் இடிக்கவேண்டும் இடிக்கும் பொழுது அவ்வப்பொழுது மாவின் மீது எண்ணெய் தடவ வேண்டும். நன்கு இடிக்கப்பட்ட மாவு ரப்பர் போல் ஆனவுடன் தேவையான அளவில் மாவை உருட்டி அப்பள அளவிற்கு ஏற்றாற்போல் உருட்டவேண்டும். உருட்டபட்ட அப்பளத்தை அதிகம் வெயில் படாத இடத்தில் காய வைக்க வேண்டும் . இப்பொழுது சுவை மிகு அப்பளம் ரெடி.
கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு தனி மவுசு ஏன் உண்டு என்றால் கைபக்குவம் என்கிறார் கண்ணன். எனவே தான் மிகவும் சுவையாக இங்கு அப்பளம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது .நீங்களும் ஒருமுறை கல்லிடைக்குறிச்சி அப்பளத்தை ருசித்து பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்
‘நான் பெற்ற இன்பத்தை இந்த வையகம் பெறலாம். 'நான் பெற்ற துன்பத்தை இந்த வையகம் பெறக்கூடாது'
‘நான் பெற்ற இன்பத்தை இந்த வையகம் பெறலாம். ஆனால், நான் பட்ட துன்பத்தை பெறக் கூடாது. அதனால்தான் என்னால் முடிந்த சேவைகளை செய்வ தோடு மதுவுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்தி வருகிறேன்’ என்கிறார் வராகி சித்தர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வராகி சித்தரை ‘நோட் புக் தாத்தா’ என்று சொன்னால்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு தெரிகிறது.
இவர், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தியும், ஜாதகம் கணித்துக் கொடுத்தும் அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை பள்ளிக் குழந்தைகளுக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறார். இவரது ஆதரவில் பெற்றோரை இழந்த ஒரு மாணவி பி.காம்., படித்துக் கொண்டிருக்கிறார். தந்தையை இழந்த மற்றொரு மாணவி 12-ம் வகுப்பு படிக்கிறார். கல்விச் சேவை செய்வதில் நாட்டம் வந்தது எப்படி? வராகி சித்தரே விவரிக்கிறார்.. எனது குருநாதர் ராதாகிருஷ்ணன், எனக்கு தீட்சை கொடுக்கும்போது, ‘நீ தனியாக மூச்சை அடக்கி தவம் ஏதும் இருக்க வேண்டியதில்லை. ஏழைக் குழந்தைகளின் அறிவுக் கண் திறக்க அவர்களுக்கு கல்விச் சேவை செய். அதுவே ஆயிரம் தவங்கள் இருந்ததற்கு சமம். உலகுக்கு என்ன தேவை என்று நீ பார்; உனக்குத் தேவை என்ன என்பது எனக்குத் தெரியும்’ என்று சொன்னார்.
எல்லோரும் சரஸ்வதி பூஜை தினத்தில் பிள்ளைகளுக்கு சுண்டலும், பொரியும் கொடுப்பார்கள். இதற்கு பதிலாக பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ஏன் நோட்டுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுக்கக் கூடாது’ என்று நண்பர்களிடம் கேட்டேன். 2000-ம் ஆண்டில் அந்தக் கேள்வியில் இருந்துதான் கல்விச் சேவையை ஆரம்பித்தேன். அன்றைக்கு ஒரு குயர் நோட்டு 2 ரூபாய்தான். கையில் இருந்த காசுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கி, ஆளுக்கு ஒன்று கொடுத்தோம். இப்போது, கல்லிடைக்குறிச்சி யில் என்னிடம் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வாங்கிப் படிக்காத பிள்ளைகள் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு கடந்த 14 ஆண்டுகளில் கல்விச் சேவை செய்ய இறைவன் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறான். நான் பிரம்மச்சாரியாக இருப்பதால் எனக்கான தேவைகள் குறைவு. அதனால், இன்றைய வருமானத்தை மறுநாளே பள்ளிக் குழந்தைகளுக்காக செலவழித்து விடுவேன்.
என்னை யாராவது பார்க்க வந்தாலும் சால்வைக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனாக்களைத்தான் வாங்கி வருவார்கள். ஏழைப் பிள்ளைகள் படிப்புக்காக உதவி செய்துகொண்டே 5 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறேன். மதுவின் கொடுமை என்ன என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 1982-ல் நான் நடத்துநராக பணி செய்தபோது மதுவுக்கு அடிமையாகி அவமானப்பட்டேன். அதெல்லாம் அழியாத கோலமாக என் மனதில் இருக்கிறது. இன்றைக்கு, எட்டாவது படிக்கும் சில மாணவர்கள் கூட குடித்துவிட்டு பள்ளிக் கூடத்துக்கு வருகிறார்கள். ‘பொல்லாத மகனைப் பார்க்கலாம். ஆனால், பொல்லாத தாயை பார்க்க முடியாது’ என்று ஆதிசங்கரர் சொன்னார். ஆனால் இன்றைக்கு, கணவன் மதுவுக்கு அடிமையாகி மயங்கிக் கிடப்பதால் மற்றொரு ஆணுக்காக பெற்ற பிள்ளையையே கொலை செய்கிறாள் தாய். அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் மது. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் உண்ணா விரதம் இருக்கப் போனேன். போலீஸ் கைது செய்துவிட்டது.
திருச்செங்கோட்டில் இருந்து சென்னை வரை 400 கி.மீ. தூரம் மதுவுக்கு எதிராக சைக்கிள் பிரச்சாரம் செய்தேன். நெல்லை மாவட்டத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம், காந்தி சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து தொடர்ச்சியாக மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)